50 வயதுக்கு மேல் படித்து 3 பட்டங்கள் பெற்ற நடிகர் முத்துக்காளைக்கு நடிகர் சங்கம் தங்க பதக்கம் வழங்கியது

தென்னிந்திய நடிகர்_சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், செயலாளர் விஷால், கார்த்திக், கருணாஸ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ப[பலர் கலந்து கொண்டனர். நடிகைகள் லதா, ரோகினி,கோவை சரளா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்,
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, மேலும் நடித்துக்கொண்டே நடிகர் முத்துக்காளைக்கு நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது. அத்துடன் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் முகம் பொறிக்கப்பட்ட தங்க பதக்கம் வழங்கப்பட்டது
நடிகர் முத்துக்காளையின் ராஜபாளையம் அருகே தங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். சண்டை பயிற்சியாளராக வேண்டும் என்று கனவு கண்டார். இவர் தனது 18ஆவது வயதில் கராத்தேயில் கருப்பு பட்டையைப் பெற்றார். இவர் பொன்மனம் (1997) படத்தில் நடிகராக அறிமுகமாகி, நகைச்சுவை கதாபாத்திரத்ததை ஏற்றார். மேலும் இவர் வடிவேலுவின் நகைச்சுவைப் பகுதிகளில் தோன்றியதன் மூலம் புகழ் பெற்றார்
சிறுவயதில் கல்வி கற்க முடியாமல் போன முத்துக்காளைக்கு 50 வயதுக்கு மேல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பி.ஏ, பின்னர் எம்.ஏ படித்து பட்டம் பெற்றார், அதற்கு பிறகு பி.எட் பட்டம் பெற்று இருக்கிறார்.
படித்து பட்டம் பெற்ற தனக்கு, நடித்து பெயர் வாங்க காரணமான நடிகர் சங்கத்துக்கு நடிகர் முத்துக்காளை நன்றி தெரிவித்துகொண்டார்.
