Month: January 2024

கோவில்பட்டி

பசுபதி பாண்டியன் நினைவிடத்தில் தொண்டர்கள் அஞ்சலி; கோவில்பட்டி சோதனைசாவடியில் போலீஸ் குவிப்பு

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் 12-வது நினைவு தினம் இன்று (10.1.2024) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி வட்டம், மேலஅலங்காரத்தட்டு கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் தொண்டர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வேன்,  கார்களில் குவிந்து வருகிறார்கள்.வெளியூர் வாகனங்கள் கோவில்பட்டி வழியாக கடந்து சென்றன. தொண்டர்கள் காரில் இருந்தபடி கோஷம் எழுப்பியபடி செல்கிறார்கள். கோவில்பட்டியில் முக்கிய சந்திப்பு பகுதியான இளையரசனேந்தல் சாலை சோதனை சாவடியில் ஏராளமான […]

செய்திகள்

பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 பரிசு ; மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக ரூ.1௦௦௦ மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்ககப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி இந்த திட்டம் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டை டி.யு.சி.எஸ். நியாயவிலைக்கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் […]

செய்திகள்

பிடிவாத போக்கை கைவிட்டு போக்குவரத்து துறை ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்; 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு, அமைப்பு செயலாளாரும்,முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :- தேர்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெறுகிறதா என்பதை கழக நிர்வாகிகள் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளர் பட்டியலில் பாகம் மாறி பெயர் இடம் பெறுவது, இறந்தவர்கள் மற்றும் குடிபெயர்ந்தவர்கள் என இரட்டை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவிலில் பிரதோஷம் சிறப்பு வழிபாடு

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் இன்று மாலை  செவ்வாய்கிழமை பவும பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனையும், நந்தியம் பெருமானையும் தரிசனம் செய்தனர்

கோவில்பட்டி

மந்திதோப்பு பூமாதேவி ஆலயத்தில் தை காட்சி திருவிழா நாள்கால் நடுதல்

 கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள பிரசித்தி பெற்ற   பூமாதேவி ஆலயம் குரு சித்தர் பீடத்தில் தை காட்சி திருவிழா முன்னிட்டு நாள்கால் நடுதல் விழா நடைபெற்றது இதையொட்டி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி  பூஜை நடைபெற்றது. 6 மணிக்கு பூமாதேவி குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது.  பந்தல் கால் நட்டி காலுக்கு பால் மஞ்சள் தீர்த்தம் விட்டு […]

கோவில்பட்டி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை;  அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு  

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்டவற்றுக்கு நீர் வரத்து அதிகரித்து  வருகிறது. 3 அணைகளும் நிரம்பும் தருவாயில் இருப்பதாலும், தொடர் மழையினாலும் தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 1509 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் உச்ச நீர்மட்டம் 143.95 அடி. நீர் இருப்பு 141.95 அடி. […]

செய்திகள்

மக்களவை தேர்தல்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை

மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்க கூடும் என்று தெரிகிறது. அனேகமாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதம்தேர்தல் நடைபெறலாம். இதனிடையே தமிழகத்தில் அதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக அ.தி.மு.க. பூத் கமிட்டி தொடங்கி அனைத்திலும் மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பணிமனையில் இருந்து வழக்கம் போல் இன்று பஸ்கள் இயங்கின

போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு  96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்கி ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். நேற்று மாலை புறப்பட்ட நீண்டதூர பஸ்கள் […]

தூத்துக்குடி

மழை எச்சரிக்கை: தாமிரபரணி ஆற்றங்கரையோர  கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், அரியலூர், பெரம்பலூர். திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை தூத்துக்குடி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.இந்நிலையில் 9 மணிக்கு தொடங்கிய மிதமான மழை பரவலாக 2 மணி நேரம் பெய்தது. ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. பிறகு மழை நின்று மக்களின் இயல்பு வாழ்க்கை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி-கிளவிபட்டி அரசு பஸ்சை மீண்டும் இயக்ககோரி சாலை மறியல்

கோவில்பட்டியில் இருந்து கிளவிபட்டி கிராமத்திற்கு தினமும் காலை, மாலை என‌ 4 தடவை அரசு பஸ் இயக்கப்பட்டது. மேலும் மினி பஸ் ஒன்றும் இயக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பாதிப்பு சமயத்தில் அரசு பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில் மினி பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இந்த  நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 17ந்தேதியில் இருந்து கோவில்பட்டியில் இருந்து கிளவிபட்டி கிராமத்திற்கு சென்று வந்த மினிபஸ்சும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அக்கிராம மக்கள், தொழிலாளர்கள் மற்றும் […]