• May 20, 2024

Month: December 2023

கோவில்பட்டி

கோவில்பட்டி தாசில்தார் அலுவலகத்தை மாற்று திறனாளிகள் முற்றுகை ; 6 மணி நேர

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி நீண்ட நாட்களாக போராடி வருகிறார்கள். தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளியின் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டி வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை இது தொடர்பாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை காலதாமதம் இன்றி உடனடியாக வழங்க வலியுறுத்தியும் தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் […]

தூத்துக்குடி

ரூ.3 லட்சம் நகை திருட்டு: மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்ய வந்தவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காமராஜர் புரத்தை சேர்ந்தவர் இமானுவேல் விஜயன் (வயது 55). தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மூத்த மகனுக்கு கோவையில் திருமணம் நடைபெற்றது. பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி ஆறுமுகநேரியில் ஒரு மண்டபத்தில் நடந்தது. அப்போது  மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதற்காக திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்த மனைவி சங்கரி (27) என்பவர் மண்டபத்திற்கு வந்திருந்தார். அவர்  மணமகனின் உறவுக்கார  பெண் ஒருவருக்கு மேக்கப் போடுவதற்காக மற்றொறு அறைக்கு சென்றார். அப்போது அந்த […]

கோவில்பட்டி

புதூர் யூனியனில் தி.மு.க.வின் ஒரே கவுன்சிலர், அ.தி.மு.க.வில் சேர்ந்தார்  

விளாத்திகுளம் தொகுதி புதூர் யூனியனில்  ராமச்சந்திரபுரம் 13 வது  வார்டில் போட்டியிட்டு  வெற்றி பெற்று கவுன்சிலராக பெருமாள்சாமி பணியாற்றி வந்தார். இந்த யூனியனில் மொத்தம் 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் இவர் மட்டுமே தி.மு.க. வை சேர்ந்தவராக இருந்தார். இந்த நிலையில், தி.மு.க. மீது  அதிருப்தியில் இருந்த கவுன்சிலர் பெருமாள் சாமி, விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன் ஏற்பாட்டின் பேரில் தி.மு.க.வில் இருந்து விலகி சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க, வில் இணைந்தார். […]

கோவில்பட்டி

எட்டையபுரத்தில் புதிய அங்கன்வாடி மையத்தின் கட்டுமான பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

எட்டையபுரம் பேரூராட்சி 11- வது வார்டில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் உருவாக உள்ளது. இதன் கட்டுமான பணிகளை  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி..மார்கண்டேயன் தொடக்கி வைத்தார் .நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன்,  கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டையபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் கதிர்வேல், தூத்துக்குடி மடக்கு […]

கோவில்பட்டி

அம்பேத்கர் நினைவு தினம்: உருவப்படத்துக்கு மரியாதை

சட்ட மேதை அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  உருவப் படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை  செலுத்தினார். விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன் ராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை […]

செய்திகள்

மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை ; அரசு மீது டி. ஜெயக்குமார்

சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :- வாழும் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து,அந்த தேவைகளை எல்லாம் நிறைவேற்றிய ஒரு உன்னதமான தலைவி அம்மா.  அவர்கள் மறைந்தாலும்கூட, இன்றும் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்கள் அத்தனைப்பேருமே போற்றக்கூடியவர். இன்று அம்மாவின் 7 ம் ஆண்டு நினைவுநாள். அவரின் நினைவை போற்றும் வகையில் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள்,மாவட்ட கழக செயலாளர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் […]

செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் கடம்பூர் ராஜு அஞ்சலி

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி  சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா  நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர்.கடம்பூர் ராஜு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா. மாவட்ட கழக இணைச் செயலாளர் பேச்சியம்மாள். மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் […]

செய்திகள்

தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்: கலந்து கொள்வோருக்கான முக்கிய தகவல்கள்

தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்(பொறுப்பு) சையது முகமது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தென்காசி புது பஸ் நிலையம் அருகே உள்ள ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி- வருகிற 9-ந் தேதி சனிக்கிழமை காலை 9 […]

செய்திகள்

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்;உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் இடைக்கால பொது செயலாளராக அவரது வி.கே சசிகலா, துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு நடைபெற்ற அ.தி.மு..க.வின் பொதுக்குழுவில் சசிகலா, தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் கடந்த 2017ஆம் ஆண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியில் இருந்தும், இடைக்கால பொதுச் செயலாளராக இருந்தும் நீக்கியது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ரஜினி மன்றம் 74 மின்விளக்குகள் வழங்கியது

தூத்துக்குடி மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்ற இணைச் செயலாளர் தவமணி, ஐக்கிய அரபு அமீரகம் பொறுப்பாளர் பொன்முருகன் ஆகியோர் ஆலோசனைபடி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரஜினிகாந்த் 74வது பிறந்தநாளை முன்னிட்டு 74 மின் விளக்குகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு தலைமை ஜெயக்கொடி தலைமை தாங்கினார். நகர துணைச் செயலாளர் சுந்தரி முன்னிலை வகித்தார். ,மன்ற காவலர்கள் பாண்டி, இந்திராஜ், கார்த்திகேயன், முத்து மாரியப்பன், சுடலை மணி, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை நகர செயலாளர் […]