ஆரோக்கியமான வாழ்விற்கு ஊட்டச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதிவரை தேசிய ஊட்டச்சத்து வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழா நடைபெற்றது. போஷன் அபியான் திட்டத்தின் கீழ் மனையியல், சத்துணவியல் பிரிவு மாணவிகள் அடுப்பில்லா சமையல் உணவு வகைகளான அவல் தயிர் சாதம், சத்து பானகங்கள். பஞ்சாமிர்தம், கடலை உருண்டை, […]
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பெருந்தலைவர் மக்கள் கட்சி 2011-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்கள் பங்கு பெறுவோம். சைலேந்திர பாபுவுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவியை கவர்னர் நிறுத்தி வைத்தது நியாயமற்றது. கவர்னர் மீண்டும் பரிசீலித்து ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பனைத்தொழிலாளர்கள் பதநீர் விற்றாலும், கள் விற்றதாக அவர்கள் மீது […]