• May 20, 2024

Month: June 2023

கோவில்பட்டி

`ஆதனின் பொம்மை’ நாவலுக்காக ஒரு வருடம் ஆய்வு செய்தேன்- எழுத்தாளர் உதயசங்கர்

கோவில்பட்டியை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய `ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவலுக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கபட்டு இருக்கிறது. விருது பெற்ற மகிழ்ச்சியில் இருந்த உதயசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆதனின் பொம்மை நாவலுக்கு விருது கிடைத்து இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாவல் மிக முக்கியமான நாவல். தமிழர்களின் வரலாற்றை சொல்லக்கூடிய ஒரு நாவல். இப்போது இருக்கக்கூடிய சமகால இந்திய பின்புலத்தை வைத்து பார்க்கும் போது இந்த நாவலுக்கு கிடைத்துள்ள விருது […]

கோவில்பட்டி

கோவில்பட்டி எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் `பாலபுரஸ்கார்’ விருது அறிவிப்பு

கோவில்பட்டியை சேர்ந்த  எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய `ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவலுக்காக சாகித்ய அகாடமியின் `பாலபுரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் மண்ணுடன் கந்தக வாசனையும் கலந்தே வீசும் பூமி கோவில்பட்டி. தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்பாளுமைகளைத் தந்த ஊர் என்பது பெருமையான விஷயம். இந்த ஊரை சேர்ந்த எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தர்மர் ஆகியோர் சாகித்யா அகாடமி விருதும்,சபரிநாதன் சாகித்யா அகாடமியின் யுவ புரஸ்கார் விருதும் ஏற்கனவே விருது பெற்று இருக்கிறார்கள்.   இவர்களை […]

கோவில்பட்டி

இணையவழி யோகாசன போட்டி; 350 பேர் பங்கேற்பு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் இணையவழி யோகாசன போட்டி நடத்தப்பட்டது. ஏ.கே.ஆல் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட்அசோசியேசன், பெஸ்ட் லைப் பவுண்டேசன், சின் யோகா பவர், இதியன் யோக அசோசியேசன்  தமிழ்நாடு  ஆகியவவை  சார்பில் இந்த  போட்டிகள் நடத்தப்பட்டன, ஆண்,பெண் தனித்தனியாக பொது, குரூப், சாம்பியன் ஆகிய வகை போட்டிகள் வெவ்வேறு வயது பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டன.போட்டிகளின் நடுவர்களாக கிருஷ்ணவேணி, குருலட்சுமி ஆகியோர் தலைமையிலான குழவினர் இருந்தனர். இணையதள யோகா போட்டியில் மொத்தம் 350 பேர் கலந்து […]

ஆன்மிகம்

பூரி ஜெகன்னாதர் ஆலயத்தில் 8 அதிசயங்கள்   

இதை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பெட்டகத்தில் இருந்து வெளிகொணர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பார்கள். இவ்வருடம் அவ்வாறு எடுத்து வைத்து பூஜிக்கப்படும் போது கிடைத்த படம் ஆகும். இதை கண்ணார தரிசிப்பவர்கள் அதி பாக்கியசாலிகள்.  இது சிலருக்கு மட்டுமே வாழ்வில் தரிசிக்க கிடைக்கப்பெறும். அவ்வகையில் நாம் அனைவரும் புண்ணியவான்களே. பூரி கோவிலுக்கு சொந்தமான இந்த சாலிகிராம் கடைசியாக 1920 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் காய்ச்சலின் போது தொற்றுநோய்களின் மோசமான விளைவுகளைத் தடுக்க எடுக்கப்பட்டது. பூரி ஜெகன்னாதர் கோவிலின் நடக்கும் […]

ஆன்மிகம்

ஊதுபத்தி ஏற்றுவதன் தத்துவம்

ஊதுபத்தி ஏற்றுவது இறைவனை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக என்று நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் கூறியிருக்க நாம் கேட்டிருப்போம் அதனுள் மறைந்திருக்கும் உண்மையான பொருளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.  ஊதுபத்தியை ஏற்றி வைத்தவுடன் அதிலிருந்து புறப்படும் தெய்வீக மணம் சுற்றுச்சூழலை சூழ்ந்துவிடும் அது புகைந்து சாம்பலானாலும் தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தன் மணத்தால் மகிழ்விக்கின்றது. இது ஒரு தியாக மனப்பான்மையின் வெளிப்பாடு ஓர் உண்மையான இறைத் தொண்டன், தன்னுடைய சுயநல குணங்களை எல்லாம் விட்டொழிக்கவேண்டும் பிறருக்காக நன்மை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். […]

ஆன்மிகம்

பசுவும்… புண்ணியங்களும்

பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த  புண்ணியம் கிடைக்கும். பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும். பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் பசுவின் கழுத்துப் பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் கொடிய பாவங்கள் விலகும்.  பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும். பசு நடக்கும் போது […]

கோவில்பட்டி

கோவில்பட்டி, கயத்தாறில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள்; சமூக நலத்துறை அலுவலர் அதிர்ச்சி

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, யுனிசெப் நிறுவனம் மற்றும் தோழமை அமைப்பு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் தூத்துக்குடியில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் எஸ்.ரதிதேவி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் கூறியதாவது:-  18 வயதுக்கு குறைவான பெண்கள், 21 வயதுக்கு குறைவான ஆண்களுக்கு நடைபெறும் திருமணம் குழந்தை திருமணமாகும். குழந்தை திருமணங்களை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராம அளவில், வட்டார அளவில், […]

கோவில்பட்டி

மாணவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக திருக்குறள்

. கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து மாணவர்களுக்கும் பிறந்தநாள் அன்று திருக்குறள் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை செல்வி தலைமையில் நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் 1330 திருக்குறளை படித்து குறள்நெறி வழி நடக்கவும், மாணவர்களின் கல்வி மேம்படவும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த் நிகழ்ச்சிக்கு  பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு பிறந்தநாள் […]

செய்திகள்

கனிமொழி எம்.பி.பயணம் செய்த பஸ்சின் பெண் டிரைவர் பணிவிலகல்  

கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வந்தார். கோவையின் முதல் பெண் டிரைவர் என்ற பெருமையை பெற்றிருந்த  ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சமூக வலைதளங்களிலும் டிரைவர் ஷர்மிளா பிரபலமாகி வந்தார். இந்த நிலையில் தி.மு.க.துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி.இன்று கோவை பயணம் மேற்கொண்டார். அப்போது  ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு […]

செய்திகள்

திண்டுக்கல் மாநகராட்சி பெண் ஆணையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

காஞ்சீபுரம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த மகேஸ்வரி திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக கடந்த மாதம் நியமிக்கபப்ட்டு பதவி ஏற்றார். திண்டுக்கல்லில் ஆர்.எம்.காலனி  காலனி 1வது தெருவில் தனியார் குடியிருப்பில் வசித்து வருகிறார். சென்னையில் அலுவலக விஷயமாக நடந்த கூட்ட்டத்தில் கலந்து கொண்டபிறகு நேற்று இரவு மகேஸ்வரி வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று காலை 6.30 ,மணி அளவில் .லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் மகேஸ்வரி வீட்டுக்கு […]