தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, போலீசார், சைல்டு லைன் மற்றும் தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளில் உள்ள கடைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகளில் கூட்டாய்வு நடத்தினர். அப்போது தூத்துக்குடியில் 18 வயது பூர்த்தியடையாத 2 வளரிளம் பருவத் தொழிலாளர்கள், கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 5 குழந்தை தொழிலாளர்கள், 2 வளரிளம் பருவத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர் விடுதியில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 54 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர்களுக்கு 27 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்கு 23 விடுதிகளும், ஒரு ஐ.டி.ஐ மாணவர் விடுதியும், கல்லூரி மாணவர்களுக்கு 2 விடுதிகளும், கல்லூரி […]
தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வந்தது. அவரது வீட்டில் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை இன்று அதிகாலை 2 மணியளவில் நிறைவடைந்தது. இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு […]
தமிழக பா. ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது :- இவ்வாறு அண்ணாமலை கூறி இருக்கிறார்.
கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பேரூராட்சி உட்பட்ட 15 வார்டுகளில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதியினர் குடிநீருக்கு அலைமோதுகிறார்கள்.இந்த நிலையில் தூத்துக்குடி அ.தி.மு.க. வடக்கு மாவட்டம் சார்பில் கழுகுமலை பேரூராட்சி நகர செயலாளர் முத்துராஜ் தலைமையில் கழுகுமலை காந்தி மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார் பெண்கள் பலர் காலி குடங்களுடன் கலந்து கொண்டு […]
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமைதாங்கினார் . ஆணையாளர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் குழந்தைகள் பள்ளி […]
ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதற்கு பின்னர் ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது மிரட்டல் வேலைகளை தொடங்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து மின்சாரத்துறை மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட வந்தபோது, முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும், சோதனை நிறைவுபெற்றவுடன் செய்தியாளர்களைச் […]
மூல முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கும் பொழுது அவருக்கு ஆறடியில் சிலை செய்து, பல ஆபரணங்களை அணிவித்து, அவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை. ஒரு கைப்பிடி மஞ்சளை ஒரு குழந்தையின் கையால் பிடித்து வைத்தாலும் அது பிள்ளையார் தான்! எந்த காரியத்தையும் விநாயகரை வணங்கி தொடங்குவது மரபு. எந்தெந்த பிள்ளையார் பிடித்து வைத்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம். பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்:- மஞ்சள் பிள்ளையார் நல்ல காரியங்களை தொடங்கும்போது, மங்களகரமாக […]
கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரம் அருகே மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் இன்று காலை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து கோஷமிட்டனர். இதில், எட்டயபுரம் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சரவணகுமார், மாவட்ட செயலாளர் ஆத்திகுமார், மாவட்ட துணை தலைவர் ஆர்.பி.பாலு, மாநில அரசு தொடர்பு பிரிவு செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த […]
அ.தி.மு.க. தலைமைக்கழக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அ.தி.மு.க. பொதுசெயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலமையில் , அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது, மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள், பிற மாநில கழக செயலாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கழகத்தில் ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்கலின் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை செர்த்தளுக்கான பணிகளை மேலும் விரைவுபடுத்துவது குறித்தும் வருகிற 20-ந்தேதி அண்டு மதுரையில் நடைபெற […]