தி.மு.க.சார்பு அணிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு: விருப்பமுள்ளவர்கள் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.க.வின் 15-வது அமைப்பு தேர்தல் முடிவுற்று மாநில நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு, பாக அளவில் கழக சார்பு அணிகளுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்ய தலைமைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது. இளைஞரணி மகளிரணி, மாணவரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கு மாநகர, […]