• June 7, 2025

Month: October 2022

செய்திகள்

`அட்யா- பட்யா போட்டி; குமரி மாவட்ட பெண்கள் அணி 3-வது இடம் பிடித்தது

தமிழகத்தில் முன்பு கிளியாந்தட்டு என்று அழைக்கப்பட்ட ஒரு விளையாட்டு , வட மாநிலம் சென்று மகாராஷ்டிராவை தலைமை இடமாக கொண்டு,அட்யா- பட்யாஎன்று பெயர் மாற்றம் பெற்று, இன்று உலகம் முழுவதும் விளையாடப்பட்டு வருகிறது.இதுஇந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, தற்போது மிகவும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு விளையாட்டு ஆகும். 16-வது மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள், அக்டோபர் 7 முதல் 9 ஆம் தேதி வரை, திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் […]

சிறுகதை

கத்திமுனையில் ரத்தம்…(சிறுகதை)

நள்ளிரவு 12 மணி…அமாவாசை இருட்டு…மழை கொட்டிக்கொண்டிருந்தது.. ரோட்டில் தண்ணீர் பெருகி ஓடியது… ஆள் நடமாட்டமே இல்லை.டிப்டாப் உடை அணிந்த இளைஞன் கையில் சூட்கேசுடன் நடந்து வந்து கொண்டிருந்தான். மழை நீர் அவன் மேல் விழுந்து தெறித்தது.முகத்தில் வழிந்த மழை நீரையும் அவன் பொருட்படுத்தவில்லை. அவனது கால்கள் வேகமாக நடந்தன. கூர்க்கா விசில் அடித்தபடி அங்கு வந்தார். டிப்டாப் இளைஞன் மீது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. விசிலை ஊதிக்கொண்டே அந்த இடத்தைவிட்டு குடை பிடித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். […]

கோவில்பட்டி

கடம்பூர் பேரூராட்சி தலைவராக ராஜேஸ்வரி தேர்வு; போட்டியின்றி உறுப்பினராகி தி.மு.க.வில் சேர்ந்தவர்

கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 3 உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.நீதிமன்ற உத்தரவின் படி 9 வார்டுகளுக்கு கடந்த மாதம் 29 ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இம்மாதம் 1ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றது. 1 சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றனர்.மொத்தமுள்ள 12 வார்டுகளில் திமுக […]

கோவில்பட்டி

ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல், நீதித்துறை நடுவர் நீதிமன்றம்; வெள்ளிக்கிழமை திறப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், தட்டப்பாறை, தருவைகுளம், மணியாச்சி, புளியம்பட்டி, பசுவந்தனை, எப்போதும்வென்றான், பசுவந்தனை, நாரைக்கிணறு, கடம்பூர் மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய போலீஸ் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட வழக்குகளை விசாரிக்க ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை ஓட்டப்பிடாரம்-குறுக்குச்சாலை தனியார் கட்டிடத்தில் திறப்புவிழா நடக்கிறது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி ஆர். குருமூர்த்தி கோர்ட்டை திறந்து வைக்கிறார்.நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் […]

செய்திகள்

டீக்கடை சூறை: கவர்ச்சி நடிகையின் சகோதரர் கைது

சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், புஷ்பா காலனியை சேர்ந்தவர் நடிகை மாயா. இவரது மகன் விக்னேஷ் குமார் (வயது 38), இவர் கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் சகோதரர் ஆவார்.இவர் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், நேற்று முன்தினம் விருகம்பாக்கம் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சேர்மதுரை என்பவரின் கடைக்கு சென்று அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.மேலும் பணம் தர மறுத்ததால் கடையை அடித்து நொறுக்கி சூறையாடியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து […]

செய்திகள்

கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பேர் நரபலி; பணத்தாசையில் விபரீத செயலில்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின் (வயது 50). லாட்டரி வியாபாரி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காலடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இதேபோல் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் பத்மா (54). இவரது கணவருக்கு உடல்நிலை சரியில்லை. பத்மா மட்டும் எர்ணாகுளம் நகருக்கு வேலை தேடி வந்தார். […]

செய்திகள்

5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஸ்ரீ சீரடி சாய் பிளஸ்ஸிங் அறக்கட்டளை

சென்னை முகப்பேர் வெள்ளாளர் தெருவில் இயங்கி வரும் ஸ்ரீ சீரடி சாய் பிளஸ்ஸிங் அறக்கட்டளை தனது மக்கள் பணியை 4 ஆண்டுகள் நிறைவு செய்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.இதையொட்டி வருகிற 15-ந் தேதி சனிக்கிழமை கலை 1௦ மணி அளவில் விழா நடத்தப்படுகிறது. முகப்பேர் வெள்ளாள தெருவில் உள்ள சக்தி பிரசன்ன விநாயகர் கோவில் அருகே அமைக்கப்படும் மேடையில் விழா நடக்கிறது;. ஸ்ரீ சீரடி சாய் பிளஸ்ஸிங் அறக்கட்டளை அறங்காவலர் குழு தலைவர் முகப்பேர் என்.இளஞ்செழியன் […]

தூத்துக்குடி

கட்சியில் புதிய பதவி: தூத்துக்குடி வந்த கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கனிமொழி எம்.பி, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வாகைக்குளம் வந்தடைந்தார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில், எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர தி,மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலையில் பின்னர் மாநகர எல்லையான எப்.சி.ஐ. குடோன் அருகில் ராஜஸ்தான் மேளதாளத்துடன் மகளிர் அணி சார்பில் கனிமொழி எம்.பி.க்கு பூரண கும்ப மரியாதை வழங்கி உற்சாகமாக வரவேற்பளித்த] […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்; கனிமொழி பேசுகிறார்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் கட்ட சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.அதன்படி 13.10.2022 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள திடலிலும் 14.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலிலும், […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை; புதிய முதல்வர் சிவக்குமார்

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வந்த கலைவாணி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை மயக்க மருந்து துறை மருத்துவர் சிவக்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், “தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும், ரூ.136 கோடி மதிப்பிலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை போன்ற திட்டஙகள் […]