• June 7, 2025

கடம்பூர் பேரூராட்சி தலைவராக ராஜேஸ்வரி தேர்வு; போட்டியின்றி உறுப்பினராகி தி.மு.க.வில் சேர்ந்தவர்

 கடம்பூர் பேரூராட்சி தலைவராக ராஜேஸ்வரி தேர்வு; போட்டியின்றி உறுப்பினராகி தி.மு.க.வில் சேர்ந்தவர்

கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 3 உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவின் படி 9 வார்டுகளுக்கு கடந்த மாதம் 29 ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இம்மாதம் 1ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றது. 1 சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றனர்.
மொத்தமுள்ள 12 வார்டுகளில் திமுக -6, காங்கிரஸ் – 1, மதிமுக -1 , சுயேட்சை 4 இடங்களை பிடித்தனர்.
இதில் போட்டியின்றி தேர்வு பெற்ற நாகராஜா, ராஜேஸ்வரி, சிவகுமார் ஆகிய 3 சுயேட்சை வேட்பாளர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். நேற்று முன்தினம் உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

முதலில் நடைபெற்ற பேரூராட்சி தலைவர் தேர்தலில் 2 வது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி நாகராஜா மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை இதனால் ராஜேஸ்வரி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை தலைவருக்கான தேர்தல் இன்று மதியம் நடைபெறுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *