உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷாசாத். இவர் அம்மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அழகுசாதன பொருட்கள், உடைகள், மசாலா பொருட்களை விற்பனை செய்து வந்தார் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் சென்று அழகுசாதன பொருட்கள், உடைகள் உள்ளிட்டவற்றை பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவிற்கு ஷாசாத் கடத்தி வந்துள்ளார். இந்த கடத்தலின்போது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் ஷாசாத்திற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் உள்ள ராணுவ தளங்கள் உள்பட முக்கிய இடங்கள் குறித்த தகவல்களை ஷாசாத் பாகிஸ்தான் உளவு அமைப்பான […]
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு எதிராக நட்பு நாடுகளை ஒன்றிணைக்கவும் 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சசி தரூர்( காங்கிரஸ்) ரவி சங்கர் பிரசாத் (பாஜக) , சஞ்சய் குமார் ஜா (ஜேடியு), பைஜயந்த் பாண்டா (பாஜக) , கனிமொழி கருணாநிதி (திமுக) , சுப்ரியா சுலே (என்சிபி), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே […]
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று அதிகாலை நாகர்கோவில் நோக்கி வந்தது. இந்த பஸ்சில் 22 பேர் பயணம் செய்தனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 6 குடும்பத்தினர், கோவில்பட்டியில் இருந்து ஒரு வேனில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றனர்.இந்த வேனை கோவில்பட்டியை சேர்ந்த சசிகுமார் (வயது 52) என்பவர் ஓட்டினார்.. நேற்று அதிகாலை 5 மணியளவில் […]
ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன், மகள் தனியாக வசித்து வரும் நிலையில் ராமசாமி, மனைவி பாக்கியத்துடன் விலாங்காட்டு வலசு பகுதியில் வசித்து வந்தார். அத்துடன் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்தார். இந்த சூழலில், கடந்த 1ம் தேதி மகன் கவிசங்கர் செல்போன் மூலம் அழைத்தும் தந்தை எடுக்காததால் அருகில் […]
தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வந்தது. அதேநேரம், சில இடங்களில் கோடை மழையும் காணப்பட்டது. பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில், தமிழகத்தில் வெயில் உக்கிரமாக காணப்படும். ஆனால், இந்த ஆண்டோ, அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இனி வரும் நாட்களிலும் தமிழகத்தில் மழை பொழிவுக்கே […]
சாலை விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டியை சேர்ந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் நிதியுதவி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் கிராமம் பரணி பார்க் பள்ளியின் கிழக்குப் பக்கம், நாமக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலை, சின்ன வடுகப்பட்டி அருகில் இன்று (17.5.2025) காலை சுமார் 5.30 மணியளவில் பெங்களூருவிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து விபத்தை ஏற்படுத்தியது. அந்த ஆம்னி பேருந்து முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி பின்னர் எதிர் சாலையில் கோவில்பட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த மேக்ஸி […]
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, இந்தியா மீது ஏவுகணை, டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் […]
வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; “சென்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது. இந்த சோதனைகளின் போது, டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காத […]
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 28.12.2024 அன்று நடந்தது. இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ், தனது மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார். இதற்கு ராமதாசின் மகனும், கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு டாக்டர் ராமதாஸ், யாராக இருந்தாலும் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது என்று கூறினார். […]
தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. 95.03 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதனை தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. 8 லட்சத்து 23 ஆயிரத்த 261 பேர் எழுதிய இந்த தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
