சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை அப்போது சென்னை மாநகர மேயராக இருந்த அமைச்சர் மா.சுப்ரமணியன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி தன் மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்தார். இதுகுறித்து பார்த்திபன் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2019-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு […]
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்கியது. 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18,344 தனித் தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வுகளள் அனைத்தும் மார்ச் 25-ந் தேதி நிறைவடைந்தது. உடனடியாக, விடைத்தாள் திருத்தும் பணிகளும் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கி நடைபெற்றது. இந்தப் பணிகள் […]
மத்திய உள்துறை அமைச்சகம் பல மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், “பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டுவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராகும் வகையில் சில மாநிலங்களில் நாளை (புதன்கிழமை) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் வருமாறு:-*எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணை தாக்குல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் ஏர் சைரன்கள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். […]
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதினர். இந்த சூழலில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர நாளை மறுநாள் (மே 7ம் தேதி) முதல் […]
தி.மு.க. பொதுக்கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்விளக்கு கம்பம்; ஆ.ராசா எம்.பி. நூலிழையில் தப்பினார்
மயிலாடுதுறை நகர தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சின்ன கடை வீதியில் நேற்று இரவு நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி. பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பலத்த காற்று வீசியதால் மேடையின் அருகே பொருத்தப்பட்டிருந்த அதிக வெளிச்சம் தருவதற்காக அமைக்கப்பட்டு இருந்த மின்விளக்கு கம்பம் திடீரென்று சாய்ந்து ஆ.ராசா எம்.பி. பேசிக்கொண்டு இருந்த மைக் வைக்கப்பட்டு இருந்த ‘போடியம்’ மீது விழுந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட ஆ.ராசா எம்.பி. தான் பேசிக்கொண்டு இருந்த மேடை […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாந்தபுரம் செந்தமிழ் நகரைச் சேர்ந்த தம்பதி ராதம்மா-குள்ளப்பா தம்பதியர், பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களை கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த லட்சுமிகாந்த் என்ற நபர் சந்தித்து உங்கள் வீட்டுக்கு அருகில் தங்கப் புதையல் இருக்கிறது என்று கூறி அதை எடுக்க ஆசை காட்டினார். மேலும் புதையலை எடுக்க ஒரு கும்பலையும் அழைத்து வந்தார். இரவில் குழி தோண்டிய அந்த கும்பல் தம்பதியின் கவனத்தை திசை திருப்பி, செயற்கையாகப் புதைக்கப்பட்ட பானையிலிருந்து […]
சாதி வாரி கணக்கெடுப்பின்போது டி.என்.டி. மக்களுக்கு தனிப்பட்டியல் இடம்பெற வேண்டும்; மாநில செயற்குழு
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் சீர் மரபினர் பழங்குடிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் நாடோடி பழங்குடியினர் தேசிய கூட்டு நடவடிக்கை இன குழுக்களின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அகில இந்திய டி.என்.டி அரசியல் முன்னணி கூட்டமைப்பு தலைவர் சுப்பாராவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம்,மாநில துணைச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் மகளிர் அணி மாநில தலைவர் விண்ணரசி மல்லிகா வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- […]
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், முஸ்லிம் இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்தச் செய்தி ஊடகங்களில் விரிவாக வெளியிடப்படவில்லை. மத்திய அமைச்சரவையில் உள்ள சிலர் போர் தொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், போர் என்பது எளிதான விஷயம் […]
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், 6-ம் […]
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம்; தூத்துக்குடியில் நடந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வில் வெற்றி பெற ஊக்கப்படுத்தும் விதமாக தூத்துக்குடி ஏ.வி.எம் கமலவேல் மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான், சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் படித்து தேர்வில் வெற்றி பெறுமாறு வாழ்த்தி ஊக்கப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் சப் இன்ஸ்பெக்டர்கள் சிலர், தாங்கள் படித்து வெற்றி பெற்றது […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
