தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு பணி (ஜமாபந்தி) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று தொடங்கியது.அதன்படி தூத்துக்குடி தாலுகா ஜமாபந்தி அலுவலராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு ஜமாபந்தியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட உமரிக்கோட்டை, கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை, அல்லிக்குளம், மறவன்மடம், செந்திலாம்பண்ணை, தெற்குசிலுக்கன்பட்டி ஆகிய 7 கிராமங்களுக்கான கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. அந்த பகுதி பொதுமக்கள் திரளானவர்கள் வந்து மனு கொடுத்தனர்.உட்பிரிவுபட்டா கோரி 8 பேரும், முதியோர் உதவித்தொகை கோரி […]
பக்ரைன் நாட்டில் கொரோனா பாதிப்பு காலத்தின் போதும், பின்னரும் சிறந்த சமூக சேவையாற்றி வரும், ” “லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ்” சமூக உதவி இயக்கம் சிறப்பான சமூக சேவை ஆற்றி வருகிறது. இந்த இயக்கத்தின் அமைப்பாளராக தமிழகத்தின் குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த சையத் ஹனீப் இருக்கிறார்.இவருக்கு “சிறந்த சமூக சேவகர்-2022” விருதை “படவ் குடும்ப சமூகம்” என்ற அமைப்பு, வழங்கியது. 1000 நாட்களுக்கும் மேலாக பக்ரைன் நாட்டை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள குறைந்த வருமானம் […]
அ.தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களை முடக்குவது தான் தி.மு.க.வின் ஓராண்டு பணி; சசிகலா சொல்கிறார்
சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வி.கே.சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அ.தி.மு.க.வில் தற்போது இருப்பவர்களை மறைந்த முதல்வர் ஜெயலிலதாவுடன் ஒப்பிட முடியாது. ஒரு கட்சிக்கு, ஒரு இயக்கத்துக்கு தலைவரை கட்சித் தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும். அவர் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவராக இருந்தால்தான் அந்த தலைமையின் கீழ் அனைவரும் கட்டுப்பட்டு இருப்பார்கள். அ.தி.மு.க.வில் தற்போது அதுபோன்ற நிலை இல்லை.பதவிக்காக அ.தி.மு.க.வில் சிலர் எனக்கு எதிராக பேசுகின்றனர். அ.தி.மு.க. தற்போது சரியான எதிர்க்கட்சியாக […]
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 700 பேர் கலந்துகொண்டனர்.இந்த கராத்தே போட்டியில் தூத்துக்குடி ஜப்பான் கராத்தே டூ கென்யோ ரியோ தமிழ்நாடு கராத்தே பயிற்சி மையம் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 15 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர். அதேபோன்று கடந்த தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளியில் குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் நடத்திய 3 மணி நேரம் தொடர் சிலம்பம் விளையாட்டில் […]
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 5 நாள் பயணமாக தமிழகம் வந்து உள்ளார். அவரை சென்னை விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் வரவேற்றனர்.தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார். வருகிற மே 28-ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு கருணாநிதியின் சிலையை […]