• June 7, 2025

பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட கனிமொழி, மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

 பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட கனிமொழி, மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, மக்களவை உறுப்பினர்கள் 17 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
இதன்படி மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி திமுக எம்.பி.,யுமான கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கனிமொழி எம்.பி. வாழ்த்து பெற்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *