• June 7, 2025

கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளிக்கு ஒலிபெருக்கி சாதனங்கள்

 கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளிக்கு ஒலிபெருக்கி சாதனங்கள்

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு கம்மவார் டிரஸ்ட் அறக்கட்டளை சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி சின்னராசு தலைமை தாங்கினார். கம்மவார் டிரஸ்ட் அறக்கட்டளை தலைவர் வி.பி.எஸ். சுப்பையா, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதாவிடம் ஒலி பெருக்கி சாதனங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள் பி.ஆர்.எஸ். சீனிவாசன், விநாயகா ரமேஷ், வரதராஜன், ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் ஆசிரியர் கெங்கம்மாள் வரவேற்று பேசினார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ரூத் ரத்னகுமாரி நன்றி கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *