பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் தவெகவினர் அன்னதானம் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு நகர பொறுப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். இளைஞர் அணி நிர்வாகி சுமங்கலி ராஜா முன்னிலை வகித்தார். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நடந்த அன்னதானத்தை தவெகா வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பாலசுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

முன்னதாக ராஜீவ் நகரில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கினர்.
நிர்வாகிகள் செல்வின் சுந்தர், வீரபாண்டி மகேஷ், செண்பக ராஜன், மதன், செந்தில்குமார் , வழக்கறிஞர் அணி நிர்வாகி ராகேந்திர சிங், மகளிர் அணி அன்னலட்சுமி, சீனி புஷ்பா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
