கோவில்பட்டி கோவில் சிறப்பு பூஜையில் கும்மியடித்த பெண்கள்

கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு தனூஷ்கோடியாபுரம் செல்வ விநாயகர் கோவில் முன்பு முளைப்பாரி எடுத்த பெண்கள் கும்மியடித்து பூஜையில் கலந்து கொண்டனர்.
பூஜைகளை சுப்பிரமணிய சாமி, முருகன் சாமி செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெங்கடேஷ் செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
