`வாழ்ந்து காட்டுவோம்’ பயிலரங்கம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பூலாங்குடியிருப்பு எஸ். எஸ் ஆர்கானிக் கார்டனில் `வாழ்ந்து காட்டுவோம்’ பயிலரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய எஸ் எஸ் ஆர்கானிக் கார்டன் நிர்வாக இயக்குனர் ஷேக்முகைதீன் பயிலரங்கத்தின் நோக்கம் பற்றி விளக்கினார்.
பணி நிறைவு பெற்ற வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரமணியம் இலக்கு, வெற்றிப் பயணம், கடின உழைப்பு,ஒழுக்கம், சுய கட்டுப்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்றினார்.
படி -எழுது என்ற தலைப்பில் விழுதுகள் அறக்கட்டளையின் தலைவர் சேகர் *உரையாற்றினார். மகிழ்ந்து வாழ் என்ற தலைப்பில் கவிதை பாடி கவிஞர் தளவாய் இளங்குமரன் உற்சாகப்படுத்தினார். தூங்கு எழு என்ற தலைப்பில் முன்னோடி விவசாயி செல்லத்துரை விளக்கி கூறினார்
நுண் கீரை வளர்ப்பு, வளர்ந்து வரும் சமூகத்தின் உணவு பழக்க வழக்கம் என்ற தலைப்பில் முன்னாள் வேளாண்மை ஆசிரியர் கோவில்பட்டி சுரேஷ்குமார் உரையாற்றினார்.
கடின உழைப்பும் வெற்றியும் என்ற தலைப்பில் பார்டர் ரஹ்மத் ஓட்டல் நிர்வாக இயக்குனர் முகமது அசன் பேசினார்.பண்ணை மேற்பார்வையாளர் அருண்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பலவேசம் செய்திருந்தார்.
