நயினார் நாகேந்திரன் தலைவராக தேர்வு:கோவில்பட்டியில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து கோவில்பட்டியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பாரதிய ஜனதா கட்சி நகரத்தலைவர் காளிதாசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில்,மாவட்ட துணைத் தலைவர் பாலு, நகர பொருளாளர் ஜெயபிரகாஷ், முனியராஜ், லட்சுமணக்குமார், மாரிச்சாமி,வேல்முருகன்,ஜெயபிரகாஷ்,காசிராஜன், மகாராஜன், சீனிவாசன்,ஊடகப்பிரிவு அம்மன் மாரிமுத்து, மகளிர் அணியினர், இளைஞரணியினர் மற்றும் பிஜேபி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


