மஹாவீர் ஜெயந்தி: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் 2624வது மஹாவீர் ஜெயந்தி விழா செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு கொண்டாடப்பட்டது ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவனர் தேன்ராஜா அனைவரையும் வரவேற்றார்,
கழுகுமலை 1008 மஹாவீர் அதிசய ஷேத்திர கமிட்டி செயலர் முகேஷ் தலைமை தாங்கினார்.அவர் பேசுகையில். மஹாவீரரின் போதனைகளான கொல்லாமை,உண்மையே பேசு,திருடாதே, போன்ற போதனைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
விழாவுக்கு ரித்திக் ,பிரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரிங்கிள் , மோக் ஷா ஆகியோர் ,பக்தர்களுக்கு லட்டு வழங்கினார்கள். நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாகிகள் இராமசுப்ரமணியன்,முத்து மாரியப்பன்,தொழிலதிபர் மண்ணு பஞ்சாபி, ஸ்ருதி பஞ்சாபி,ஆகியோர் கலந்து கொண்டனர்.


