வக்பு வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சிறுபான்மையின மக்களை உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதவை திரும்ப பெற வலியுறுத்தியும் கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர்,நகர்மன்ற உறுப்பினர் சரோஜா, தாலுகா செயலாளர் பாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.நகரத் துணைச் செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன்,தாலுகா துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கரும்பன்,மாவட்டக்குழு உறுப்பினர்கள் பரமராஜ்,சேதுராமலிங்கம் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
இதில் நகரக்குழு உறுப்பினர்கள் வக்கீல் ரஞ்சனி கண்ணம்மா,செந்தில் ஆறுமுகம்,ராஜீ,சண்முகவேல்,விஜயலட்சுமி,சுரேஷ்,லெனின், ஏஐடியுசி சீனிவாசன் மற்றும் ஷேக்முகமது,ஹிமாயூன்,பிஸ்மில் கமர்தீன்,நசீர் கோவில்பட்டி வட்டார முஸ்லீம் ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்


