சவுந்தரபாண்டியனாருக்கு மணி மண்டபம்; மனோஜ் பாண்டியன் கோரிக்கை ஏற்பு

சவுந்தரபாண்டியனார்
திராவிட இயக்கங்களில் ஆணிவேரான சுயமரியாதை இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவரான பட்டிவீரன்பட்டி டபிள்யு.பி..ஏ. சவுந்தரபாண்டியனாருக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஆலங்குளம் தொகுதி உறுப்பினர் பி.எச்.பி.மனோஜ் பாண்டியன் வேண்டுகோள் விடுத்து பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ” ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன் கோரிக்கையை ஏற்று பட்டிவீரன்பட்டி டபிள்யு.பி..ஏ. சவுந்தரபாண்டியனார் அவர்களுக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து தனது துறை சார்ந்த அறிவிப்பு என்பதால் செய்தித் துறை அமைச்சர் பி ஏ சாமிநாதன் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
