• June 8, 2025

17 மாதமாக  வாடகை பாக்கி:  கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கட்டிட உரிமையாளர் பூட்டு போட்டதால் பரபரப்பு  

 17 மாதமாக  வாடகை பாக்கி:  கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கட்டிட உரிமையாளர் பூட்டு போட்டதால் பரபரப்பு  

கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சங்கரன்கோவில் சாலையில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் 12.9.23 முதல் செயல்பட்டு வருவதாக சொல்லபபடுகிறது.

இந்நிலையில் வாடகை கட்டணம் நிர்ணயம் தொடர்பாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 17 மாதங்களாக கந்தசாமிக்கு வாடகை பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. 

பலமுறை கேட்டும் அதிகாரிகள் தராமல் அலட்சியம் காட்டினர். மேலும் இது தொடர்பாக கந்தசாமி கடந்த 3 ம்  தேதி கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருந்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில் இன்று காலையில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பூட்டு புதிதாக கூடுதல் பூட்டு போடப்பட்டு இருந்தது. இதனால்  அலுவலகத்தை திறக்க வந்த ஊழியர்கள் திறக்க முடியாமல் தவித்தனர்,

இதர்கிடையே பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் கூடி விட்டனர், காத்திருக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது தங்கள் மேலதிகாரியிடம் கேட்டுவிட்டு சொல்வதாக தெரிவித்தனர்.

17 மாதங்களாக வாடகை தரவில்லை என்பதால் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, கட்டிட உரிமையாளரால்  பூட்டு போட்ட சம்பவம் கழுகுமலை பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *