தூத்துக்குடி தருவைக்குளம் மீன்பிடி இறங்குதளம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க அதிகாரிகளுடன் சண்முகையா எம்.எல்.ஏ.ஆய்வு

தூத்துக்குடி தருவைக்குளம் மீன்பிடி இறங்குதளம் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கவேண்டும். அப்பகுதியில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தது வருகிறார்கள.
இதை தொடர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது ஆலோசனையின்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தருவைக்குளம் மீன்பிடி இறங்குதளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்,
அவருடன் வளத்துறை செயற்பொறியாளர் .கணபதி ராமகிருஷ்ணன் உதவி செயற்பொறியாளர் ஜெயசுதா , உதவி பொறியாளர் திருமதி.வள்ளி ஆகியோர் சென்று இருந்தனர். கடல் அரிப்பு ஏற்பட்ட சந்தியாகப்பர் ஆலயம் பகுதி மற்றும் கடல் அரிப்பினால் இடிந்த மீன் வலை பின்னும் கூடத்தினையும் பார்வையிட்டனர்.
கடல் அரிப்பை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி அதிகாரிகளுடன் சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு நடத்தினார்.
தருவைக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை.வின்சென்ட் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் லூர்துராஜ் கட்டளைக்தாரர் .மகாராஜன் இளைஞரணி அணிட்டன் மீனவரணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ் கிளைச் செயலாளர் தயாளன் உள்ளிட்டோர் உடன் சென்று இருந்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 1 வது வார்டு பண்டாரம்பட்டி, முள்ளிகுளம் பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் உள்ளதாகவும் அப்பகுதிகளில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது எனவும் அவற்றை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்
இதன் பேரில் பண்டாரம்பட்டி மேற்கு தெரு, தெற்கு தெரு ராமலட்சுமிநகர் முள்ளிகுளம் லாசர் நகர் பகுதிகளில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம் சி.சண்முகையா நேரில் பார்வையிட்டார். அவருடன் மின்வாரிய அதிகாரிகளுடன் சென்று இருந்தனர்.
