கோவில்பட்டி மில் தொழிலாளிக்கு பணி நிறைவு பாராட்டு

கோவில்பட்டியில் மில் தொழிலாளிக்கு சிந்தாமணி நகர் பொதுமக்கள் பணி நிறைவு பாராட்டு தெரிவித்தனர்.
கோவில்பட்டி வள்ளி டெக்ஸ்டைல் மில்லில் தொழிலாளியாக சிந்தாமணி நகரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் 40 ஆண்டுகள் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றார்.
பணி நிறைவு பெற்ற மில் தொழிலாளி மாரிமுத்துவுக்கு சிந்தாமணி நகர் பொதுமக்கள் சார்பில் பணி நிறைவு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில் சிந்தாமணி நகர் வளர்ச்சிக்குழு தலைவர் பால்ராஜ் தலைமையில் ஊர் பொதுமக்கள் பணி நிறைவு பெற்ற மில் தொழிலாளி மாரிமுத்துவுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
சிந்தாமணி நகர் வளர்ச்சி குழு நிர்வாகிகள்,பொதுமக்கள்,உறவினர்கள், வள்ளி டெக்ஸ்டைல்ஸ் மில் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
