• June 7, 2025

கச்சத்தீவை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்  

 கச்சத்தீவை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்  

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது,. கூட்டத்துக்கு கட்சியினர் பொதுசெயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

*கழகத்தின் கொடி நாள் (12.2.2025) 25ஆம் ஆண்டு “வெள்ளி விழாவை” முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராமந்தோறும் உள்ள அனைத்து கிளை கழகங்களிலும் கொடி ஏற்றி இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்

*அண்ணா பல்கலைக் கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஞானசேகரனை வன்மையாக கண்டிப்பதோடு, காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தாலும், அந்த “சார்” (SIR) யார் என்று இன்னும் கண்டுபிடித்து தெரியபடுத்தவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக ஞானசேகரனுக்கு உதவிய “சாரை” கைது செய்ய வேண்டும்

*. தமிழக அரசு உடனடியாக மது மற்றும் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்

* மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு கான “கச்சத்தீவை மீட்டு” எடுக்க வேண்டும்

*தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற திமுக ஆட்சியில் பல்வேறு மாவட்டங்களில் (தென்காசி, புதுக்கோட்டை, திருச்சி, வேலூர்) கனிம வளக் கொள்ளை மற்றும் மணல் கொள்ளை போன்ற கனிம வளங்களை பக்கத்து மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திராவிற்கு கடத்தி கொண்டிருக்கின்றனர். இதை வன்மையாக தேமுதிக சார்பில் கண்டிக்கிறோம். இதுபோதாது என்று திமுக அரசு மீண்டும் 13 மாவட்டத்தில் மணல் குவாரிகளை திறக்க தேர்வு செய்திருப்பதை தேமுதிக கண்டிப்பதோடு இல்லாமல், தேர்வு செய்த மணல் குவாரிகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.

*தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்

*புதுக்கோட்டை வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சினையில், உண்மைக் குற்றவாளிகளை  கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை வேண்டும்

*தமிழநாடு முழுவதும் குண்டும், குழியுமாக இருக்கின்ற சாலைகளை உடனடியாக சரி செய்து வாக்களித்த மக்களுக்கு வாக்குறுதிப்படி பாதுகாப்பான சாலைகளை அமைத்து தர வேண்டும்

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *