கோவில்பட்டி அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில் காய்ச்சல் கண்டறிதல் மற்றும் நோய் தடுப்பு முகாம்


கோவில்பட்டி சுகாதார மாவட்டம் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் வித்யா விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கோவில்பட்டி வட்டம் அப்பனேரி கிராமத்திற்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில் காய்ச்சல் கண்டறிதல் மற்றும் நோய் தடுப்பு முகாம் இன்று காலை நடைபெற்றது.
கீழ ஈரால் நடமாடும் மருத்துவ குழுவினரால் இந்த முகாம் நடத்தப்பட்டது. சர்க்கரை நோய் . ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. குறிப்பிட்ட சில இடங்களில் முகாமிட்டு இந்த சோதனைகள் நடத்தப்பட்டன,
இப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பரிசோதனை செய்து கொண்டனர்/ தேவைப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன, மேலும் கால் வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் மருந்துகள் வழங்கப்பட்டன,நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது .முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்
மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கொசுக்கள் உற்பத்தி தடுப்பு ஆய்வு நடத்தினார்கள். பிளாஸ்டிக் பேரல்களில் இருப்பு வைத்து இருக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்கிறதா? கொசு முட்டைகள் இருக்கிறதா என்று சோதனை நடத்தினர். ‘
சில வீடுகளில் இருந்த தண்ணீரில் கொசுமுட்டைகள் மற்றும் புழுக்கள் இருந்ததை கண்டு அவற்றை கீழே கொட்டியதுடன் அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவினார்கள். மேலும் வீட்டு உரிமையாளர்களுக்கு தேவையான அறிவுரைகள் கூறினார்கள்.
தொட்டிகளில் வைத்திருக்கும் செடிகளில் பூச்சிகள் இருக்கிறதா என்பதையும் பார்த்து சோதனை செய்தனர். இளநிலை பூச்சியியல் வல்லுநர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் மத்தியில் இந்த முகாம் நல்ல வரவேற்பை பெற்றது.
