கோவில்பட்டி `உமா பிளாஷ்’ நா.பிச்சையா காலமானார்

கோவில்பட்டி ராயல் ஸ்டுடியோ உரிமையாளர் கோமதிநாயகத்தின் சீடரான நா.பிச்சையா, உமா பிளாஷ் என்ற பெயரில் ஸ்டுடியோ நடத்தி வந்தார். கோவில்பட்டி போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவராக இருந்தார்.
புகைப்பட துறையில் நீண்ட கால அனுபவமிக்க நா.பிச்சையா வயது மூப்பின் காரணமாக கடந்த 6 மாதமாக உடல்நலம் குன்றி இருந்தார். சில நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வியாழக்கிழமை இரவு 11.05 மணிக்கு காலமானார். அவருக்கு இன்று 84 வயது முடிந்து நாளை 85 வது வயது பிறக்கிறது.
நா.பிச்சையா மறைவுக்கு .நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பத்திரிகை மற்றும் ஸ்டுடியோ புகைப்பட கலைஞர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் புதுத்தெருவில் உள்ள அவரது வீட்டில் நாளை சனிக்கிழமை காலை 11 மணியளவில் இறுதி சடங்கு நடைபெறுகிறது, இதை தொடர்ந்து நடராஜபுரத்தில் உள்ள இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படுகிறது.
