‘கட்சியை வழிநடத்து, ஆட்சிக்கு வழிகாட்டு: கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டியால் பரபரப்பு

திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு இன்று (ஜனவரி 5) பிறந்தநாள். திமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். தூத்துக்குடியிலும் பிறந்தநாள் நிகழச்சிகள் நடைபெற்றன.
இந்த் சூழலில் தமிழ்நாடு முழுவதும் பெப்சி வி.எஸ்.பாலமுரளி என்பவர் பெயரிட்டு ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது,..
`கட்சியை வழிநடத்து ஆட்சிக்கு வழிகாட்டு’ என்ற வாசகத்துடன் கருணாநிதி, பெரியார் துணையோடு, திமுக கட்சிக் கொடியுடன் அண்ணா அறிவாலயத்தில் இருந்து தமிழ்நாடு சட்டப்பேரவை நோக்கி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ கனிமொழி செல்வது போல அந்த சுவரொட்டியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.அதில், Way to 2026 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த சுவரொட்டிகள், திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் எதிரிலும் ஒட்டப்பட்டுள்ளன. கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து மட்டுமல்லாது கட்சியிலும், ஆட்சியிலும் அவருக்கான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும் அமைந்திருக்கிறது.
25 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் அனுபவம் உள்ள கனிமொழிக்கு, மாநில அரசியலில் இதுவரை எந்த வாய்ப்பும் வழங்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த சுவரொட்டிகளை அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ளது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
