வேலுநாச்சியார் உருவ மாஸ்க் அணிந்த ஓவிய பள்ளி மாணவர்கள்

கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் முத்தானந்தபுரம் தெருவில் உள்ள கொண்டையராஜு ஓவிய பயிற்சி பள்ளியில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினம் கடைப்பிடிக்கபப்ட்டது.
இதையொட்டி பெண்களுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்திட மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் வீரமங்கை வேலுநாச்சியார் உருவ மாஸ்க் அணிந்து வீரமங்கையின் புகழை உலகிற்கு பறைசாற்றவும்,பெண்களுக்கு எதிரான அனைத்து செயல்களையும் தடுத்து நிறுத்தவும், நாட்டின் பாதுகாப்பிற்கும், ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பாடுபட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்துச்செல்வம்,ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகிகள் முருகபூபதி முத்துகோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
