கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் திருப்பலி


உலக மக்களின் பாவம் போக்க பெத்தலகேம் நகரில் மாட்டு தொழுவத்தில் மீட்பராம் இயேசு கிறிஸ்து பாலகனாக பிறந்தார் இப்பிறப்பை கிறிஸ்தவ மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள், அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் நேற்று இரவு 11:45 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி கொண்டாடப்பட்டு 12 மணிக்கு வான வேடிக்கைகள் முழங்க இயேசு பாலகன் பிறப்பை கொண்டாடி திருப்பலி நிறைவேற்றினார்கள்
திருப்பலியில் புனித சூசையப்பர் திருத்தல பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார் உதவி பங்குத்தந்தை அருண்குமார் அடிகளார் நம்பிக்கை சபை அருட்தந்தை போஸ்கோ அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள்.
திருத்தலத்தில் கிறிஸ்துபிறப்பை விளக்கும் வகையில் குடில் அமைத்து வைத்திருந்தனர்
இதேபோல் புனித சூசையப்பர் திருத்தலத்தின் கிளைப் பங்கான கசவன் குன்று,இலுப்பையூரணி, பூசாரிபட்டி ,லிங்கம் பட்டியிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது
இன்று காலை 8 மணிக்கு புனித சூசையப்பர் திருத்தலத்தில் திருப்பலி நடைபெற்றது. கிளைபங்கான புதுக்கிராமம், அப்பனேரி ஆலயங்களில் திருவிழா திருப்பலி நடைபெற்றது இதில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
