• June 8, 2025

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிவைத்த 55 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

 கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிவைத்த 55 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டி பாரதி நகர் மேட்டுத் தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கு காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினார்கள்.
அந்த பகுதியில் வசிக்கும் சின்ன மாரி என்பவரது வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த 55 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த அரிசி மூட்டைகள் சின்னமாரிக்கு எப்படி வந்தது? இதன் பின்னணியில் ரேஷன்கடை ஊழியர்கள் யார் யாரெல்லாம் உள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *