• June 8, 2025

தொடர் மழையினால் கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

 தொடர் மழையினால் கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று இரண்டாவது நாளாக மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கோவில்பட்டி நகரில் பல்வேறு இடங்களில் மழைவெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. மந்திதோப்பு கண்மாய் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு  தண்ணீர் வெளியேறியது.. இதனால் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.,சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

இந்த பகுதிகளை கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கடம்பூர் ராஜு நேரில் பார்வையிட்டார். கண்மாய்உடைப்பு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் வரவிடாமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் பிரசித்தி பெற்ற கழுகாசலமூர்த்தீ கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குமார தெப்பத்தில் தண்ணீர் சிறிதளவு தான் இருந்தது.

தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த மாலையினால் தெப்பத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக தெப்பம் நிரம்பும் சூழலில் உள்ளது. இன்று தொடர் மழை காரணமாக கோவிலுக்கு பகதர்கள் வருகை குறைவாக இருந்தது.

கழுகுமலையில் இருந்து கோவில்பட்டி வரும் வழியில் வானரமுட்டி கிரமத்தில் உள்ள கல்லூரணி கனமாய் நிறைந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கோவில்பட்டி -தூத்துக்குடி இடையே உள்ள எப்போது வென்றான் நீர் தேக்கத்தில் தண்ணீர் நிரம்பி மறுகால் அதிக அளவு பாய்கின்றது ஆதலால் ஆதனூர் மிளகு நத்தம் முல்லூர் ஐயர்பட்டி முத்துக்குமாரபுரம் கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கோவில்பட்டி அருகே காமாநாயக்கன் பட்டி கனமாய் நிரம்பி பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் ஓடியது. இதனால் அந்த வழியாக சில மணி நேரம் வாகன போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. பின்னர் வெள்ளம் குறைந்த பிறகு மெதுவாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

முக்கூடல் ஆற்றில் நெல்லை மாநகராட்சி மற்றும் தனியார் ஆலைக்கு சொந்தமான இரண்டு பம்பிங் ரூம்களில் சிக்கி iஇருந்த 3 தொழிலாளர்களை சேரன்மகாதேவி தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பாதுகாப்புடன் மீட்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *