• June 8, 2025

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் நிதி உதவி

 திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் நிதி உதவி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெய்வானை என்ற பெண் யானை இருந்து வருகிறது. அந்த யானை பக்தர்கள் மற்றும் பாகன்களிடம் அன்பாக பழககூடியது.. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி அதன் பாகன்களில் ஒருவரான உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோரை எதிர்பாராவிதமாக தாக்கியதில் அவர்கள் இருவரும் மரணமடைந்தனர

 அதனைத் தொடர்ந்து மருத்துவ குழு யானையை பல்வேறு வகையான ஆய்விற்குட்படுத்தியது. ஆய்வில், யானைக்கு எந்த பிரச்சினையும் இல்லை, யானை மீது அதிக பிரியம் கொண்ட சிசுபாலன் எடுத்துக் கொண்ட அதிகப்படியான உரிமையின் காரணமாக யானை கோபமடைந்ததும், அதனை தடுக்க முயன்ற உதயகுமாரை யார் என்று தெரியாமல் யானை தாக்கியதும் தெரிய வந்திருக்கிறது.

சம்பவம் நடைபெற்றதும் அறநிலையத்துறை சார்பில் பாகன் உதயகுமார் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 பேர் இறந்தமைக்கு வருத்தம் தெரிவித்ததுடன், முதலமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து யானை தாக்கி இறந்து போன 2 பேர் குடும்பத்திற்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு, உதயகுமார் மற்றும் சிசுபாலன் குடும்பத்தாரை சந்தித்து முதலமைச்சர் பொதுநல நிதி ரூ.2 லட்சம், அறங்காவலர் குழுத் தலைவர் அவர்கள் வழங்கிய ரூ.3 இலட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை வழங்கி ஆறுதல் கூறினார்.

அமைச்சருடன் இந்து சமப அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சித்தலைவர் தக.இளம்பகவத், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) டாக்டர். ஆர்.சுகுமார்,மாவட்ட ஊராட்சித் தலைவர்.அ.பிரம்மசக்தி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஆர்.அருள் முருகன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் .சிவ ஆனந்தி,  சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், இணை ஆணையர் இந்து சமய அறநிலையத்றை.அன்புமணி, நகராட்சி துணை தலைவர் ஏ.பி.ரமேஷ், திருசெந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *