• June 8, 2025

தனி மனித தாக்குதல்கள் கூடாது: தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தல்

 தனி மனித தாக்குதல்கள் கூடாது: தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தல்

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து விஜய் கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 7 தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்ய புஸ்ஸி ஆனந்த்-க்கு, தவெக தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், தனி மனித தாக்குதல் கூடாது என்று தவெக சார்பாக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடத்த ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் புஸ்ஸி ஆனந்த் கட்சி நிர்வாகிகளிடம், மாற்று கட்சியினர் வைக்கும் எதிர் கருத்துகளுக்கு கண்ணியமான முறையில் பதிலடி கொடுக்க வேண்டும். அநாகரீகமாக பேச கூடாது என கூறியுள்ளார். உங்களை கடுப்பேற்றும் வகையில் பேசினால் அதற்கு விழுந்து விட கூடாது. எப்படி பேசினாலும் கண்ணியமாக பதில் கொடுக்க வேண்டும். மக்களுக்கு உதாரணமாக நாம் இருக்க வேண்டும். மற்ற கட்சியினர் பேசுகிறார்கள் என்பதற்காக நாம் பேச கூடாது. ஊடக விவாதங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தி உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *