• June 8, 2025

‘அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க கோரிக்கை

 ‘அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க கோரிக்கை

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘அமரன்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகியது. படம் வெளியாகி இரண்டு வாரங்களிலேயே சுமார் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

பொதுவாக திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி ஒரு மாதத்திலேயே ஓடிடியில் வெளியாகும். அந்த வகையில் இந்த மாத இறுதியில் ’அமரன்’ படம் நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாவதாக இருந்தது.

இந்நிலையில், திரையரங்குகளில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்தை 8 வாரங்கள் கழித்தே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் ஜனவரி மாதம் தான் ‘அமரன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *