கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணி: கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து 4-ந்தேதி முதல் பஸ்கள் இயக்கப்படும்

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தின் ஒரு பகுதி
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் திங்கட்கிழமை முதல் (4.11.2024) தற்காலிகமாக கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நகராட்சி தலைவர் கருணாநிதி மற்றும் ஆணையாளர் ஆகியோர் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு மூலதன மானிய நிதி இயங்குதல் மற்றும் பராமரிப்பு 2024-25ம் ஆண்டு திட்டத்தின் கீழ் அண்ணா பேருந்து நிலையம் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இப்பேருந்து நிலையத்திலிருந்து இயங்கி வந்த பேருந்துகள் அனைத்தும் 4-11-2024ம் தேதி முதல் பை-பாஸ் ரோட்டில் உள்ள கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து தற்காலிகமாக இயக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.,
