• June 8, 2025

கோவில்பட்டியில் போதை விழிப்புணர்வை வலியுறுத்தி மினி மாரத்தான்

 கோவில்பட்டியில் போதை விழிப்புணர்வை வலியுறுத்தி மினி மாரத்தான்

கோவில்பட்டி சுபாநகர் பகுதியில் அமைந்துள்ள உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதை விழிப்புணர்வை வலியுறுத்தி மினி மாரத் தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி சேர்மன் விஜயன்தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அண்ணாமலை சாமி, பொறியியல் கல்லூரி முதல்வர் ரவீந்திரன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முதல் சுபா நகரில் உள்ள கல்லூரி வரை நடந்த மாரத்தான் பந்த்தயத்தை ஓட் பந்தயத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் . நெடுஞ்செழிய பாண்டியன் மற்றும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி  வைத்தனர்.

.மாரத்தான் போட்டியில் சிறியவர்கள் முதல் முதியோர் வரை வயது வித்தியாசமின்றி ஆர்வமுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.6 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற இம் மாரத்தான் ஓட்டபந்தயத்தில் தூத்துக்குடி காமராஜர் கல்லூரி மாணவர் மாணிக்கதுரை முதல் பரிசையும், காட்டுராமன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர் கருத்த பாண்டி இரண்டாவது பரிசையும் , திருநெல்வேலி ஆனந்த ராஜ் மூன்றாவது பரிசையும் தட்டிச் சென்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு, பாராட்டு சான்றுகளை வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன்,வழங்கினார் இந்நிகழ்ச்சிக்கானஅனைத்து ஏற்பாடுகளையும் உடற்கல்வி இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *