சான்ட்னரின் சுழலில் சாய்ந்த இந்தியா: 156 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணியின் மொத்த விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர்.இந்தியா தரப்பில் சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியினர், நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் ரோகித் டக் அவுட்டாக, அதனை தொடர்ந்து கில் 30 ரன்னிலும், ஜெய்வால் 30 ரன்னிலும், கோலி 1 ரன்னிலும், பண்ட் 4 ரன்னிலும், சர்பராஸ் கான் 11 ரன்னிலும், அஸ்வின் 4 ரன்னிலும், ஆகாஷ் தீப் 6 ரன்னிலும், பும்ரா ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 156 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து தனது 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது.
