கனமழை காரணமாக வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்ற நடிகர் ஸ்ரீமன்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் ஸ்ரீமன். வடக்கிழக்கு பருவ மழை நேற்று இரவு முதல் தொடங்கியது. தற்பொழுது சென்னையில் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னைக்கு ரெட் அல்ர்ட் விடப்பட்ட நிலையில் சென்னையில் பல இடங்களிலும்.,சாலைகளிலும் மழைநீர் தேங்கி இருக்கிறது.தமிழக அரசு மழைநீரை வடிக்க முடிந்த வேலைகளை செய்து வருகின்றது.
இந்நிலையில் டைரக்டர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டை காலி செய்து ஸ்ரீமன் அவரது நுங்கம்பாக்கம் வீட்டிற்கு மாறியுள்ளார். வெள்ளத்தை அரசு சிறப்பாக கையாண்டு வருவதாக நடிகர் ஸ்ரீமன் பாராட்டினார். இப்பொழுது செய்யும் பணிகளை இன்னும் துரிதமாக வேகமாக செய்தால் நன்றாக இருக்கும். இங்கு யாரை சொல்லியும் குற்றமில்லை அரசு அவர்களின் வேலையை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த இடத்தில் இன்னும் சில கால்வாய் பணிகளை சீர் செய்தால் அது அடுத்த வருடத்திற்கு உதியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
