• June 8, 2025

சென்னையில் கனமழை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

 சென்னையில் கனமழை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது . குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.. கனமழையால் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியுள்ளது இந்த நிலையில் ,சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை பேசின் மேம்பாலத்தில் மழை நீர் அகற்றும் பணிகளை  முதல்-அமைச்சர்  ஆய்வு மேற்கொண்டார். மழை நீர் வெளியேற்றுதல் உள்ளிட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

சென்னையில் புளியந்தோப்பு பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெருநகர சென்னை மாநகராட்சி முன்களப்பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். பின்னர், அருகில் இருந்த தேநீர் கடைக்கு அவர்களை அழைத்து சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *