கோவில்பட்டியில் குழந்தைகளுக்கான இலவச இருதய மருத்துவ பரிசோதனை முகாம்

கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,திருநெல்வேலி ராயல் மருத்துவமனை சார்பில் கோவில்பட்டி ஏ.வி மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கான இருதய மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. முகாம் தொடக்க நிகழச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் தாமோதரக்கண்ணன் தலைமை தாங்கினார்.
ரோட்டரி அவார்ட்ஸ் சேர்மன் விநாயகா ரமேஷ்,சாலை பாதுகாப்பு பிரிவு சேர்மன் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி சங்க பொருளாளர் கிருஷ்ணசாமி ,இணை செயலாளர் பழனிக்குமார், நிர்வாகிகள் சீனிவாசன்,பாபு, நாராயணசாமி,வீராச்சாமி,முத்து முருகன்,ராஜ்குமார்,ராஜேந்திரன்,பூல் பாண்டி,நடராஜன்,மாரியப்பன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமினை ஏவி மேல்நிலைப்பள்ளி செயலாளர் சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார். முகாமில் பிறவி இருதய குறைபாடு உள்ள குழந்தைகள், இருதய அடைப்பு, மூச்சுத் திணறல் உள்ள குழந்தைகளுக்கு எக்கோ, ஈஜிசி உள்பட இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகாமில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன,
சென்னை அப்போலோ மருத்துவமனை இருதய நிபுணர் மருத்துவர் ராம் கிஷோர் முகாமில் கலந்து கொண்டு 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினார். குழந்தைகள் நல மருத்துவர் துரை பத்மநாபன்,\ சின்னச்சாமிபிரபாகரன்,ரெட் கிராஸ் மோகன்ராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.
