காற்றாற்று வெள்ளம்; பாலத்தை கடக்க முடியாமல் தவித்த 64 மாணவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள செக்காரக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு மகிழம்புரம் பகுதியில் உள்ள ஓடையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்த வெள்ளம் ஓடையின் குறுக்கே உள்ள தாம்போதி பாலத்தை மூழ்கடித்து சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக செக்காரக்குடி மகிழம்பூ ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. செக்காரக்குடி செல்லும் தரைப்பாலம், கொம்புக்காரநத்தம் தரைப்பாலம் ஆகியவை தண்ணீரில் மூழ்கின. இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் மின்சார சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிபட்டனா்.
இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து உள்ளது. சாயர்புரம் பகுதியில் மாலை 6 மணிக்கு சாரல் மழை பெய்தது. இதனால் இந்த பகுதியில் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இ்ப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
. கனமழை காரணமாக செக்காரக்குடி ஊருக்கு வருகின்ற வழியிலுள்ள தாம்போதி பாலத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் 64 மாணவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் செக்காரக்குடியில் தவித்தனர். அவர்களுக்கு ஊராட்சி மூலம் சாப்பாடு வழங்கப்பட்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் முயற்சியால் மழை குறைந்ததும் இரண்டு வேன்கள் மூலம் இரவு 8:30 மணியளவில் அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
