இமானுவேல் சேகரனார் சிலைக்கு அதிமுக- திமுக சார்பில் மரியாதை


விடுதலை போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் 100வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதிமுக சார்பில் இமானுவேல் சேகரனார் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர் சத்யா, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி,அன்புராஜ், அழகர்சாமி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், கலை பிரிவு மாவட்ட செயலாளர் போடுசாமி,அதிமுக மாவட்ட இணை செயலாளர் முருகேஸ்வரி,இணைச் செயலாளர் நீலகண்டன், நகராட்சி கவுன்சிலர் செண்பகமூர்த்தி,, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் ஜெயந்தி,அதிமுக நிர்வாகிகள் இந்திரன்,பசுபதி, அங்குசாமி,தங்கப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திமுக
கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பில்இமானுவேல் செகரனார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம்,அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன், அறங்காவல் குழு உறுப்பினர் சண்முகராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் நாகராஜ், தொமுச நாகராஜன், மாவட்ட பிரதிநிதி அசோக்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன், கிளைச் செயலாளர்கள் சார்லஸ், தங்கராஜ், சிவசுப்பிரமணியன், மகளிரணி பாலம்மாள், கனகம்மாள், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இமானுவேல் சேகரனார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
