• June 8, 2025

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு

 வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு

இயற்பியல்,வேதியியல்,மருத்துவம்,இலக்கியம்,பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவா்களுக்கும்.,அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 117 முறை நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு வென்ற அனைவருக்கும் டிசம்பர் 10-ம் தேதி நோபல் பரிசை உருவாக்கிய ஆல்ஃபிரெட் நோபலின் நினைவு தினத்தன்று வழங்கப்படும். தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலா்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. மருத்துவம், இயற்பியல் துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அக்டோபர் 9-ம் தேதி வேதியியல் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் துறைக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர்,டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது

இதில் கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக டேவிட் பேக்கருக்கு நோபல் பரிசின் ஒரு பாதியும்.,புரத கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக டெமிஸ் ஹஸாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகிய இருவருக்கு ஒரு பாதியும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாள்களில் மற்ற துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *