பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியை தொடருமா இந்தியா

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும்., பி பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். துபாயில் நடைபெறும் இன்றைய 12-வது லீக் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோத உள்ளன. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும்.அதுமட்டுமல்லாது ரன்ரேட்டிலும் முன்னேற்றம் காண வேண்டியது மிக முக்கியம்.
எனவே இவ்விரு அணிகளும் வெற்றியை பெற இப்போட்டியில் முனைப்புக்காட்டும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
