கோவில்பட்டி அருகே வாலிபர் வெட்டிகொலை

கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் செண்பகப்பேரி கிராமம் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செண்பகராஜ் என்பது மகன் பாண்டியராஜ் (vவயது 25). இவர் கட்டிட தொழில் செய்துள்ளார். இன்று காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர். நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை தேடி சென்றபோது, அங்குள்ள கண்மாய் பகுதியில் வெட்டு காயங்களுடன் பாண்டியராஜ் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்,
பாண்டிராஜை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து பாண்டிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமாக அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? கொலையாளிகள் யார் எனபது குறித்து போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
