கோவில்பட்டி பைபாஸ் சாலையில் 81 அடி உயர மதிமுக கொடிக்கம்பம் அமைக்கும் பணி தொடக்கம்

ராமநாதபுரத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மதிமுக சார்பில் நிரந்தரக் கொடிக்கம்பம் அமைக்கும் பணி தொடஞ்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி மத்திய ஒன்றியம், ஆவல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், கணேஷ் பேக்கரிக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள இடத்தில், மதிமுக பொதுசெயலாளர் வைகோ வயதை குறிக்கின்ற வகையில் பீடத்துடன் கூடிய 81 அடி உயர நிரந்தர கொடி கம்பம் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடிக்கம்பம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ரமேஷ், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், ம.தி.மு..க. துணைப்பொதுச் செயலாளர் தி.மு.ராசேந்திரன்,கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன், புதூர் ஒன்றிய செயலாளர் ராஜசேகர், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் கடலையூர் மாரிசாமி, குருவிகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகோபால்,மாவட்ட துணை செயலாளர் தெய்வேந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் எல்.எஸ்.கணேசன் வனராஜ், விவசாய அணி மாநில துணைச் செயலாளர் சிவகுமார், தீர்மானக் குழு உறுப்பினர் முத்துச்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் முத்துப்பாண்டி மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் விக்னேஷ், துணை அமைப்பாளர் யுவசித்தன்,பொறியாளர் ராம்குமார், மற்றும் செண்பகராஜ், நாகராஜ், ஆகியோர் பங்கேற்றனர்.
