67வது நினைவு தினம்: இம்மானுவேல் சேகரனார் உருவப்படத்துக்கு மரியாதை


சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில், அவரது படத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் இம்மானுவேல் சேகரனார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
, விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கபப்ட்டு இருந்த தியாகி இம்மானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து , மேற்கு ஒன்றிய செயலாளர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் ஓசநூத்து கிராமத்தில் அமைந்துள்ள இம்மானுவேல் சேகரனார் சிலைக்குயூனியன் சேர்மன் எல்.ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
