• June 8, 2025

நாகம்பட்டி கல்லூரியில் ஆசிரியர் – மாணவர் பன்னாட்டு கருத்தரங்கம்

 நாகம்பட்டி கல்லூரியில் ஆசிரியர் – மாணவர் பன்னாட்டு கருத்தரங்கம்

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தமிழ்ச் சூழலில் ஆசிரியர் – மாணவர் எனும் பொருண்மையில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

உதவிப் பேராசிரியர் முனைவர் மு. பவானி வரவேற்று பேசினார். தமிழ்த்துறை தலைவர்  இரா. சேதுராமன் நோக்கவுரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் வெ. இராமதாஸ் தலைமையுரை ஆற்றினார். நாகம்பட்டி BSNL ஓய்வு பெற்ற ச. காளியப்பன், ஷபி டிரேடர்ஸ் பணியாளர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் மற்றும் பண்பாட்டுத் துறை இணைப் பேராசிரியர் சீதாலட்சுமி சிறப்புரை நிகழ்த்தினார்.

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மெய்யியல் துறை முதுநிலை விரிவுரையாளர் திரவியநாதன் திலீபன் மெய்நிகர் முறையில் சிறப்புரையாற்றினார்.

திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் செ. இராமலட்சுமி, சங்கரன்கோவில் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கோ. லில்லி  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதலாமாண்டு தமிழ்த்துறை மாணவி நன்றி கூறினார். உதவிப்பேராசிரியர் முனைவர் மு. சித்ராதேவி கருத்தரங்கைத் தொகுத்து வழங்கினார். நாகம்பட்டி ஜெயலட்சுமி, உடற்கல்வி இயக்குநர் முனைவர் செ. கணேசன், திசையன்விளை மனோ கல்லூரி உதவிப்பேராசிரியர் பாலகிருஷ்ணன், சிவகாசி பிஎஸ்ஆர் உதவிப்பேராசிரியர் மாரியம்மாள் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *