செல்போன் பயன்படுத்தும் போது எச்சரிக்கை தேவை; மாணவிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்/ அப்போது அவர் பேசியதாவது:-
\செல்போன் பயன்படுத்தும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உங்களது புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை தேவையில்லாமல் சமூக வலை தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
அப்படி உங்களது புகைப்படம் மற்றும் வீடியோவை வைத்து யாராவது மிரட்டினால் தயங்காமல் காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கலாம். இதனால் மிரட்டிய நபருக்கு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் படி 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றுத் தர முடியும். மேலும் புகார் அளிப்பவர்களின் விவரமும் ரகசியமாக வைக்கப்படும்.
எப்போதும் உங்களுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர் கூறுவதின் படி நடக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்பதை நிறுத்த கூடாது. தேவையில்லாத பொறாமை, கோபம் போன்றவற்றை தூக்கி எறியுங்கள். எப்பொழுதும் தன்னம்பிக்கை மற்றும் பிறருக்கு உதவும் எண்ணத்துடன் இருந்து வாழ்க்கையில் மிகபெரிய வெற்றியாளராக மாற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்/
தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலர் முரளி கணேசன், இயக்குனர் லட்சுமி ப்ரீத்தி, தலைமை ஆசிரியர் சாந்தினி கவுசல் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
